மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் திடீர் வாகன சோதனை - 1617 நபர்கள் மீது வழக்கு பதிவு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் திடீர் வாகன சோதனை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று (29.09.2021 ) "OPERATION DISARM VEHICLE CHECK ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது மாவட்டம் முழுவதும் சுமார் 37 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?
இவ்வாகனச் சோதனையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாகனச் சோதனையின் போது வாகனஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்து அறிவுறுத்தியும், விதிமீறல்களில் ஈடுபட்ட 1617 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வாகனச் சோதனையில் சுமார் 220 காவலர்கள் ஈடுபட்டனர்.



No comments
Thank you for your comments