கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12-09-2021 அன்று மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கான கண்காணிப்பு அலுவலர் பா.பொன்னையா அவர்கள் தலைமையில் படப்பை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று (11.09.2021) நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி பி.ஸ்ரீதேவி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
No comments
Thank you for your comments