Breaking News

கள்ளக்காதலுக்காக கணவனை எரித்து கொன்ற மனைவி... தகாத உறவால் தறிகெடும் குடும்பங்கள்... அற்ப சுகத்திற்காக அனாதையாகும் அரும்புகள்...

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே கள்ளக்காதலுக்காக கணவனைக் கொன்று 10 நாட்கள் தலைமறைவாக இருந்த மனைவி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். 

பிரேதத்தை மீட்டு போலீசார் தீவிர விசாரணை.... கள்ளக் காதலனுக்கு வலைவீச்சு...

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் 7ஆண்டுகளாக வசித்து வருபவர் தங்கவேல்(44). இவருக்கு விமாலாராணி(37) என்ற மனைவியும் , ஹரிஷ்ராகவ்(14) என்ற மகன் உள்ளனர். இவர் ஓரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.


இந்நிலையில் அவரது சகோதரர் சக்திவேல் தனது தம்பி தங்கவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது மனைவி விமலா ராணி மகன் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாக தெரிவித்து தொலைபேசி துண்டிக்கப்பட்டுவிட்டன. 

மீண்டும் கடந்த 1ம் தேதி தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. 

மீண்டும் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.

கள்ளக் காதலுக்கு பலியான தங்கவேல்

இதனால்  சந்தேகமடைதங்கவேல் அப்பா சோமமங்கலம் காவல் நிலையத்தில் சென்று, தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகி, தன் கணவரை கடந்த 28ம்தேதி மதியம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருவாமனையால் அவரது கழுத்தில் 2 முறை வெட்டியதால் சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

கள்ளகாதலன் சேலத்தை சேர்ந்த ராஜா

இரவு 10 மணி வரை பிரேதத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் தனது கள்ளகாதலனான சேலத்தை சேர்ந்த ராஜா என்பவரை வரவழைத்து அருகில் உள்ள ஏரியில் பிரேதத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, மேற்படி பிரேதத்தை இன்று காலை 8 மணிக்கு ஏரியில் பிரேதத்தை கைப்பற்ற சென்றபோது, மனைவி விமலா ராணி இங்கு இல்லை என முன்னுக்கு பின் முரணாக கூறி  போலிசாரை குழப்பி உள்ளார். 

அதன்பின், தீவிர விசாரணையில், விமலாராணி அளித்த தகவலின் படி கடந்த 2ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே பாதி நிலையில் எரிந்த சடலம் இறந்த நபரின் உடல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மணிமங்கலம் காவல்துறையினர் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி விமலா ராணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மேலும் கள்ளக்காதலன் ராஜாவை 3 தனிப்படை அமைத்து  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 கள்ளக்காதலால் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

தகாத உறவால்  குடும்பங்கள் தறிகெடும் நிலை தொடர்கதையாக உள்ளது....  இதனால்  குழந்தைகள் அனாதை ஆகின்றன... வாழ்வின் அர்த்தம் குழந்தைகளும், அன்பான குடும்பமும் என்பதை உணர வேண்டும்...  அற்ப சுகத்திற்காக எதிர்காலத்தை தொலைக்கின்றனர்.... 

 

No comments

Thank you for your comments