Breaking News

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திடீர் ஒத்திவைப்பு..!

புதுடெல்லி:

நாடாளுமன்றமழைக்கால கூட்டத்தொடர்  முடிய 2  நாங்கள் இருக்கும் பொழுது மக்களவை  மறு தேதி குறிப்பிடாமல் இன்று திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த திடீர் ஒத்திவைப்புக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில், பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெருமளவு முடங்கியது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இவ்வாறு விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றியதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய வகுப்பு ஒன்றை சேர்ப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் 127 வது அரசியல் சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது மக்களவை உறுப்பினர் அனைவரும் அந்த மசோதாவுக்கு ஒருமனதாக ஆதரவு தந்தனர் அதன் காரணமாக எதிர்ப்பு இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இத்தகைய இணக்கமான சூழ்நிலை மக்களவையில் நேற்று  நிலவியது.

இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே பெபகசுஸ்  விவகாரத்தை கிளப்பின. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

மாநிலங்களவை பகல் 12 மணி வரையும் மக்களவை மறு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன.

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நடந்துகொண்ட விதம் குறித்து உருக்கமாக பேசினார். உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறிவிட்டதாகவும், சில உறுப்பினர்கள் மேஜை மீது அமர்ந்தும், சிலர் மேஜைகளில் ஏறியும் அமளியில் ஈடுபட்டதால், அவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டதாகவும் அவைத்தலைவர் கண்ணீர்மல்க பேசினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும்  நிலையில் தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  

இத்தகைய  அதிரடி நடவடிக்கை இதற்கு முன்னர் மக்களவையில் இடம் பெற்றுள்ளதா என்று தெரியவில்லை .

No comments

Thank you for your comments