கழுதூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி...
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார ஒருங்கினைப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசிகாமணி,தண்டபாணி,மருத்துவர் செளமியா கலந்துகொண்டனர்.
முன்னதாக நாடக குழுவினர்கள் கொண்டு வீதி வழியாக நடனமாடிக்கொண்டு வாகனம் மூலம் ஒலிப்பெருக்கி வாயிலாகவும் விளம்பர பதாகைகள் ஏந்திகொண்டு கொரோனா விப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் தேவகிருஷ்ணன், துணைதலைவர் ஆகாசதுரை, செயலர் ரேகா, வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments