கொரோனா தொற்று விழிப்புணர்வு பேரணி
கடலூர், ஆக.9
தொண்டங்குறிச்சியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்றதலைவர் பச்சையப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொண்டங்குறிச்சி ஊராட்சியில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசிகாமணி, தண்டபானி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில்கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார ஒருங்கினைப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக சமம் இசைகலை நாடக குழுவினர்கள் கொண்டு வீதி வழியாக நடனமாடிக்கொண்டு வாகனம் மூலம் ஒலிப்பெருக்கி வாயிலாகவும் விளம்பர பதாகைகள் ஏந்திகொண்டு கொரோனா விப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஊராட்சிமன்றதலைவர் பச்சையப்பன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைதலைவர் செல்வி நீலகண்டன், வார்டு உறுப்பினர்கள் செல்வமணி காசிநாதன், செல்விமாணிக்கம், முத்தையா, மதியழகன், ஜோதிதனபால், டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments