வேப்பூர் ஓம்சக்தி கோயிலில் கஞ்சி கலய ஊர்வலம்
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டிலுள்ள ஓம் சக்தி ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில் பூசாரி மரியா வேளாங்கண்ணி தலைமையில் பக்தர்கள் கஞ்சி கலயம், தீச்சட்டி, பால்குடம் சுமந்து கூட்டுரோட்டிலிருந்து கோயில் வரை ஊர்வலமாக சென்றனர்
பின்னர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து பக்தர்களுக்கும் , பொதுமக்களுக்கும் கூழ் ஊற்றினார்கள்
இந்நிகழ்ச்சியில் இக்கோயில் சார்பில் மாலை அணிந்து மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments