இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை விண்ணப்பித்து பெறலாம்....
திருவள்ளூர் :
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, முதிர்வு தொகை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அளித்து திட்டத்தின் பணப்பயன்களை பெறலாம் என்று திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தபட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, வைப்புத் தொகை ரசீதுகள் பெற்று 18 வயது முடிவடைந்துள்ள நிலையில், முதிர்வு தொகை பெறுவதற்கு தங்களைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் கீழ்காணும் ஆவணங்களை அளித்து இத்திட்டத்தின் பணப்பயன்களை பெறலாம்.
முதிர்வு தொகை பெறுவதற்கு
1. சேமிப்பு பத்திரத்தின் அசல் (ம) நகல்,
2. பத்தாம் வகுப்பு படித்ததற்கான மதிப்பெண் பட்டியல்,
3.பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (தாய், மகள்) கையொப்பத்துடன்,
4. ஒரு ரூபாய்கான அஞ்சல் வில்லை (Revenue Stamp)
5. வங்கி கணக்கு எண் விவரம் (Passbook முதல் பக்க நகல்)
ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (2ஆம் தளம்), திருவள்ளுர் மாவட்டம், தொலைபேசி எண்: 044-29896049 என்ற அலுவலக முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments