நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்...பெயர் பட்டியல் இணைப்பு
புதுடெல்லி, ஆக.4-
நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் அதிகமாக 8 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
யு.ஜி.சி.,யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு(8);
டெல்லியில் ஏழு(7);
ஒடிசா (ம) மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு(2);
புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு (1) போலி பல்கலைகள் உள்ளன.
இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
Click here 👉 பெயர் பட்டியல் Fake-Universities.pdf



No comments
Thank you for your comments