Breaking News

சிக்கலில் செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்... உங்களிடம் ஒரு வேண்டுகோள் ....

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகர் கார்த்திக் ராஜ் தனக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என கு ற் றம் சாட்டி இருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடம் அதிக போய் சேர்ந்ததற்கு செம்பருத்தி சீரியலும் காரணம். இதில் கார்த்திக் ராஜ்-ஷபானா ஜோடி மக்களிடம் பிரபலமாக சீரியலும் TRPயில் முன்னனியில் இருந்தது.  ஆனால் இடையில் சீரியலில் கதாநாயகனாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் வெளியேறினார். 

இந்நிலையில் கார்த்திக் ராஜ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரை சிலர் மிரட்டு வதாகவும், எங்களை தாண்டி நீ எப்படி படம் நடிப்பாய் என சிலர் மி ரட் டுவ தாகவும் ஒரு வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் தானே ஒரு கம்பெனி தொடங்கியுள்ளதாகவும் அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் எனவும்,  என் வாழ்க்கையில் இதுவரை எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள் மட்டும் தான். இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாக கேட்கிறேன். சின்னதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, உங்களால் என்ன முடியுமோ அதை அனுப்புங்க. நீங்கள் ஆதரவளித்தால் தான் இது முடியும்.  இவ்வாறு கூறி இருக்கும் கார்த்திக் ராஜ் பணம் எப்படி அனுப்ப வேண்டும் என்கிற விவரங்களையும் கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ,



No comments

Thank you for your comments