Breaking News

வங்கிகள் மூடப்பட்டால் 90 நாளில் டெபாசிட் தாரர்களுக்கு காப்பீட்டுத் தொகை - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி:

வங்கிகள் தோல்வியடைந்து அதனால் மூடப்பட்டாலோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியினால் இயங்க தடை விதிக்கப்பட்டாலோ 90 நாட்களுக்குள் டெபாசிட் தாரர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க வகை செய்யும் விதத்தில் டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் கியாரண்டி கார்ப்பரேஷன் சட்டத்தை திருத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

புதன்கிழமை அன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சமீபத்தில் மூன்று அல்லது நான்கு வங்கிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது அவற்றில் சில வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் ஆகும் இந்த வங்கிகளில் டெபாசிட் வைத்திருந்தவர்கள் தங்கள் தொகையை எடுக்க முடியாமல் சிரமப்பட்டார்கள். இந்நிலையை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை  முடிவு செய்தது.

ஏற்கனவே வங்கிகள் எல்லாம் அவற்றின் டெபாசிட் தொகையை ரிசர்வ் வங்கியினால் நடத்தப்படும் நிறுவனத்திடம் இன்ஷ்யூர் செய்யவேண்டும் என்று விதி உள்ளது. 

அதன்படி டெப்பாசிட் தொகையில் 1 லட்சம் ரூபாய் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு காப்பீடு செய்யப்படும் தொகையை 5 இலட்சமாக உயர்த்துவது என்று ஏற்கனவே அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு காப்பீடு செய்யப்படும் தொகையில் டெபாசிட் தொகை மற்றும் அதற்கான வட்டியும் அடங்கும் வங்கிகளில் உள்ளிட்ட பகுதிகளில் 98.3 சதவீதம் 1 லட்சம் முதல் 5 இலட்சத்துக்கும் உள்ளது. டெபாசிட் தொகையில் 5 லட்சமாக காப்பீட்டு அளவை உயர்த்தும் பொழுது டெப்பாசிட் தொகையில் 50.9% காப்பீடாக கிடைத்துவிடும்.

இவ்வாறு கிடைக்கும் காப்பீட்டுத் தொகை 90 நாட்களுக்குள் டெபாசிட் தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இப்பொழுது சட்டத்தை திருத்துவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிதாக தொழில் தொடங்குவோர் மத்தியில் லிமிடெட் அபிலிடி பார்ட்னர்ஷிப் சட்டம் பிரபலமாக உள்ளது இதன்படி பங்குதாரர்களின் முதலீட்டுப் பொறுப்பு குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

பங்குதாரரின் முதலீடு 25 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அந்த நிறுவனத்தின் விற்று வரவு 40 லட்சத்துக்கு குறைவாக அல்லது சமமாக இருந்தால் அந்த பார்ட்னர்ஷிப் சிறிய பார்ட்னர்ஷிப் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த சிறிய பார்ட்னர்ஷிப் தொடர்பான விதிகள் மீறப்படும் பொழுது முன்னர் குற்றவியல் சட்ட விதிகள் பயன்படுத்தப்பட்டன. குற்றவியல் சட்ட விதிகளை பயன்படுத்தக்கூடாது என்று சட்டத்தை திருத்த அரசு யோசித்து வருகிறது அத்துடன் சிறிய பார்ட்னர்ஷிப் அளவை 5 கோடி உயர்த்தவும் விற்று வரவை 50 கோடியாக உயர்த்தவும் அரசு யோசித்து வருகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments