டெல்லியில் ஆக்சிஜன் நெருக்கடி.... டிவிட்டரில் மத்திய அரசுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை
புதுடெல்லி, டிச.21-
டெல்லியில் ஆக்சிசன் பற்றாக்குறை தொடர்கிறது. மீண்டும் மத்திய அரசை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக மருத்துவமனைகளுக்கு ஆக்சிசன் கிடைக்க வழி செய்யுங்கள் என்று ட்விட்டரில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சில மணி நேர உபயோகத்திற்கு மட்டுமே ஆக்சிசன் உள்ளது. மீண்டும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிசன் கிடைக்காவிட்டால் அவற்றைப் பயன்படுத்தும் நோயாளிகள் மரணம் அடைவார்கள் என்று மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்தன.
டெல்லியில் ஆக்சிசன் பற்றாக்குறை தொடர்கிறது. மீண்டும் மத்திய அரசை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக மருத்துவமனைகளுக்கு ஆக்சிசன் கிடைக்க வழி செய்யுங்கள் என்று ட்விட்டரில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளில் ஒன்று கங்காராம் ஹாஸ்பிடல் இங்கு உள்ள கோவிட் நோயாளிகளுக்கான 485 படுக்கைகளில் 475 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். 80 சதவீதம் பேருக்கு ஆக்சிசன் அவசியம் தேவை. இதுகுறித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நாங்கள் கோரிக்கை அனுப்பியுள்ளோம் என்று கங்கா மருத்துவமனையில் தலைவர் டி.எஸ். ராணா தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள மற்றொரு பிரபலமான தனியார் மருத்துவமனை ஆகாஷ் பெத்துக்க இது மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜோதி மிஸ்ரா. ஒவ்வொரு நாளும் ஆக்சிசன் இருப்பு நிலவரத்தை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவித்து வருகிறோம். ஆனாலும் ஆக்சிசன் சிலிண்டர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது என்று மிஸ்ரா கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிசன் நெருக்கடி நிலவுகிறது என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தினார். நிலைமை இன்னும் சீராகவில்லை என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



No comments
Thank you for your comments