நாளை மறு நாள்.. அதிமுக தலைமை கழகத்தில் வேட்பாளர் நேர்காணல்
சென்னை, மார்ச் 2 :
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட உள்ளது என அதிமுக தலைமை கழகம் இன்று (02.03.2021) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் போட்டியிட விரும்பி விருப்பமனுக்கள் பெறப்பட்டிருக்கிறது.
விருப்ப மனுக்கள் மார்ச் 3ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது மார்ச் 4ம் தேதியிலிருந்து மாவட்ட வாரியாக நேர்காணல் தொடங்கும் என்ற அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.கூட்டாக அதிகார பூர்வமாக இன்று (02.03.2021) அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில் போட்டிய விரும்பி தலைமைக் கழகத்தில் விருப்ப மனு செலுத்திய அனைத்து கழக உடன் பிறப்புகளுக்குமான நேர்காணல், தலைமை கழகத்தில் வருகின்ற 4.3.2021 வியாழக் கிழமை கீழ்க்கண்டவாறு மாவட்ட வாரியாக நடைபெற உள்ளன.
காலை 9 மணி முதல்:
கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள்.
தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மாவட்டங்கள்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்கள்.
திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள்.
புதுக்கோட்டை, வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி மாவட்டங்கள்.
கோவை புறநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் மாநகர் மேற்கு.
சேலம் மாநகர், சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்கள்.
பிற்பகல் 3 மணி முதல்:
கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்கள்.
வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு மத்தியம், கடலூர் மேற்கு மாவட்டங்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்கள்.
திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டங்கள்
வடசென்னை வடக்கு ( கிழக்கு ), வடசென்னை வடக்கு ( மேற்கு), வட சென்னை தெற்கு ( கிழக்கு ), வடசென்னை தெற்கு ( மேற்கு ) மாவட்டங்கள்
தென்சென்னை வடக்கு ( கிழக்கு ), தென்சென்னை வடக்கு ( மேற்கு), தென்சென்னை தெற்கு ( கிழக்கு ), தென்சென்னை தெற்கு ( மேற்கு ) மாவட்டங்கள், சென்னை புறநகர் மாவட்டங்கள்.
புதுச்சேரி, கேரள மாநிலம்
இந்நேர்காணலில் தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரம் அறிந்திட தங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் தலைமை கழகத்திற்கு வருகை தந்து நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஒப்புதல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



No comments
Thank you for your comments