Breaking News

பாஜக எம்.பி. மர்ம மரணம்...! கொலையா.. ? தற்கொலையா..? போலீசார் தீவிர விசாரணை..!

புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.



62 வயதான ராம் ஸ்வரூப் சர்மா, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் எம்.பி. யாக உள்ளார். கடந்த முறையும் மாண்டி தொகுதியில் இவர் வெற்றி பெற்றிருந்தார். டெல்லியின் ஆர்.எம்.எல். மருத்துவமனை அருகே உள்ள கோமதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

டெல்லியில் வசித்து வரும் ராம் ஸ்வரூப் ஷர்மா இன்று காலை வெகு நேரமாகியும் தனது அறைக்கதவை திறக்காத நிலையில் அவரின் தனி உதவியாளர் ஷர்மாவின் அறையை தட்டியிருக்கிறார். பல முறை தட்டியும் அறைக்கதவை அவர் திறக்காததால் காலை 7.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அவருடைய உதவியாளர் இது தொடர்பாக தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், எம்.பியின் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும், கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை, உடற்கூராய்வு பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பிறகே அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர். ராம் ஸ்வரூப் ஷர்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளார்கள்.  இமாச்சல பிரதேசத்தின் ஜோகிந்தர் நகரை சேர்ந்தவரான ராம் ஸ்வரூப் தொகுதி அமைப்பு செயலாளராக இருந்து மாநில அமைப்பு செயலாளராக உயர்ந்தவர்.   பாராளுமன்றத்தின் வெளியுறவு கமிட்டியிலும் அங்கம் வகித்து வந்தார்

ராம் ஸ்வரூப் அரையில் தற்கொலை கடிதம் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்று போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே எம்.பி ராம் ஸ்வரூப் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதில் அர்ப்பணிப்பு கொண்ட தலைவர். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அவர் அயராது உழைத்தார். அவரது அகால மற்றும் துரதிர்ஷ்டவசமான மறைவால் வேதனையில் தவிக்கிறேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Shri Ram Swaroop Sharma was a dedicated leader, who was always committed to solving people’s problems. He worked tirelessly for the betterment of society. Pained by his untimely and unfortunate demise. My thoughts are with his family and supporters in this sad hour. Om Shanti.


ஹிமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராக் தாக்கூரும் ராம் ஸ்வரூப் ஷர்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம் மும்பையில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேச எம்.பி மோகன் தெல்கர் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு எம்.பி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

हिमाचल प्रदेश विधानसभा के बजट सत्र में आज हमने मण्डी के सांसद श्री रामस्वरूप शर्मा जी के असामयिक निधन पर शोक उदगार प्रस्तुत किया।
इस दुखद घटना के कारण विधानसभा की आज की कार्यवाही स्थगित की गई है।
ஹிமாச்சல பிரதேச சபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மண்டி MP ஸ்ரீ ராம்ஸ்வரூப் சர்மா ஜி அவர்களின் அகால மறைவுக்கு இன்று இரங்கல் தெரிவித்தோம்.
இந்த துயர சம்பவத்தால் சட்டசபையின் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைப்பு.
 
Hide Translation
 
Rate this translation
May be an image of 7 people, people sitting, people standing and indoor
You and 2K others
167 Comments
39 Shares
Like
Comment
Share

No comments

Thank you for your comments