Breaking News

2024 அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்-டிரம்ப் ..

வாஷிங்டன், மார்ச் 2-

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.



அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப்,  ஜனநாயக கட்சியின் ஜோபைடனின் தோல்வியை தழுவினார். தோல்விக்குப்  பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசிய டிரம்ப், 2024- ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம் என்று கூறினார்.

டிரம்ப் மேலும் கூறுகையில், நாம் தொடங்கிய இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை.  பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என்றார்.



மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பொதுமக்கள் பலி!-ஐநா தகவல்

நியூயார்க், மார்ச் 2-

மியான்மரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய வன்முறையில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நான்கு வாரங்களுக்கு முன்னர் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை முடக்க, மியான்மர் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது எட்டு பேர் பலியானதாக மியானமரில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மியான்மரில் ராணுவ ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான ராணுவத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு இராணுவத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.” என்று மியான்மரில் உள்ள ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தசனி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நாள் முழுவதும், நாடு முழுவதும் பல இடங்களில், போலீஸ் மற்றும் இராணுவப் படைகள் அமைதியான ஆர்ப்பாட்டகாரர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி குறைந்தது 18 பேர் இறந்து போயுள்ளனர் மற்றும் 30’க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

“யாங்கோன், டேவி, மாண்டலே, மெயிக், பாகோ மற்றும் போகோக்கு ஆகிய இடங்களில் கூட்டங்களுக்குள் நேரடி வெடிமருந்துகள் வீசப்பட்டதன் விளைவாக மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் கண்ணீர் புகை பயன்படுத்தப்பட்டதாகவும், நீர் பீரங்கி மற்றும் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.” என ஐநா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் ஐ.நா.வின் எண்ணிக்கை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments

Thank you for your comments