Breaking News

ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

 அகமதாபாத், ஏப்.20-
அகமதாபாத்திலிருந்து மும்பை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை அகமதாபாத்திலிருந்து மும்பை
புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

பின்னர் அந்த விமானத்தின் புறப்பாடு நிறுத்தப்பட்டு விமான நிலைய அதிகாரிகளால் தனி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மார்ச் மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு தொலைப்பேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுத்தார்.

No comments

Thank you for your comments