Breaking News

தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 9 கோடியே 39 லட்சம் ரூ‌பாய் பறிமுதல்

சென்னை, மார்ச் 19-
Indian money rupeeதேர்தல் கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில்‌ இதுவரை 9 கோடியே 39 லட்சம் ரூ‌பாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ‌‌

தேர்தல் ஆணை‌யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்‌தல் விதிகளை
மீறியதாக இன்றுவரை ஒரு ‌லட்சத்து ‌‌82 ஆயிரத்து 188 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 93 ஆயிரத்து 868 புகார்கள், சுவர் வி‌ளம்பரங்கள் அழிக்கப்பட்டதால் முடிவுக்கு வந்துள்ளதா‌கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை கண்காணிப்புக் குழுவினரால் 5 கோடியே 89 லட்சம் ரூபாயும், பறக்கும் படையினரால் 3 கோடியே 50 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சுவர் விளம்பரம், பேனர், போஸ்டர் தொடர்பாக 652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments