Breaking News

தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: இருவர் வீர மரணம்

காஷ்மீர், பிப்.13:
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்துள்ளனர். 

குப்வாரா மாவட்டம் மர்சாரி என்ற கிராமத்தில் ஒரு
வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்துள்ளனர்.

அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தீவிர துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வீட்டினுள் இருந்த தீவிரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலின் போது பாதுகாப்பு படையினர் 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

No comments

Thank you for your comments