பஸ் டிக்கெட்டிற்கு ரூ.5 இல்லாமல் அல்லாடிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்: உதவிய அரசு அதிகாரி
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ.5 கடன் வாங்கி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைநகர் பாட்னாவில் புதிய பேருந்துகளை
புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேருந்தின்
உள்புறம் எப்படி உள்ளது என்பதை பார்க்க ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.
அவர் பாட்னா பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி மைதானத்திற்கு
சென்றார். பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பெண் கண்டக்டர் வந்து
நிதிஷிடம் ரூ.5க்கான டிக்கெட்டை அளித்தார்.
டிக்கெட்டை வாங்கிய நிதிஷ் தனது ஆடையில் உள்ள பாக்கெட்டுகளில் தேடிப்
பார்த்தபோது தான் அவரிடம் பணமே இல்லை என்பது அவருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தன்னுடன் வந்திருந்த அரசு உயர் அதிகாரி ஒருவரிடம் ரூ.5
கடன் வாங்கி கண்டக்டரிடம் அளித்தார்.
ஊரக மேம்பாட்டு துறை தலைமை செயலாளர் அம்ரித் லால் மீனா தான் நிதிஷுக்கு ரூ.5 கடன் கொடுத்த அதிகாரி.
No comments
Thank you for your comments