“கர்ப்பிணிப் பெண் பலி விவகாரம்!” - மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!
காஞ்சிபுரம் | செப்டம்பர் 11, 2026
.jpg)
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
உறவினர்கள் & சமூக அமைப்புகளின் கொந்தளிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகப் பெண் தேன்மொழி (35) மற்றும் அவரது பச்சிளம் குழந்தை, வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இடத்தைக் விட்டு நகரக் கூடாது என மர வியாபாரி ஆறுமுகம் தடுத்ததால் தார்ப்பாய் கூடாரத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாகப் பொன்னேரிக்கரை காவல்துறையினர் முதலில் கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் (Bonded Labour System Abolition Act) கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அமைப்புகளின் எதிர்ப்பு: குற்றவாளி மீது வலுவான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த தேன்மொழியின் உறவினர்கள் மற்றும் பழங்குடியின நல அமைப்புகள் காவல் நிலையத்தைச் முற்றுகையிட்டு தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
காவல்துறையின் அதிரடி மாற்றம்: போராட்டங்கள் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்து, வழக்கை தீவிரப்படுத்திய பொன்னேரிக்கரை காவல் நிலையப் போலிசார், தற்போது மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Prevention of Atrocities Act) வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையை முடக்கிவிட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments