Breaking News

விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வி!✈️நடிகர் ரஜினி பதிலளிக்க மறுத்து 'நன்றி' சொல்லி எஸ்கேப்!

 சென்னை | ஆகஸ்ட் 26, 2026

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘தர்மன்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.


அப்போது முதலமைச்சர் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், 'நன்றி' என்று மட்டும் கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

படப்பிடிப்பு அப்டேட்கள் குறித்து ரஜினிகாந்த்:

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேட்டி அளித்தார்:

  • ஜெயிலர் 2 நிறைவு: நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
  • ‘தர்மன்’ படப்பிடிப்பு: அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார். இத்திரைப்படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்றும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து தாங்கள் இருவரும் இதில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

விஜய் ஆட்சி குறித்த கேள்விக்கு மௌனம்:

திரைப்பட விவகாரங்களைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் "தமிழகத்தில் முதலமைச்சர் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினர்.

இக்கேள்வியைக் கேட்டதும் சிரித்தபடியே பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், சுருக்கமாக ‘நன்றி’ எனக்கூறி கைகூப்பி விட்டு, வேறு எந்தக் கருத்துக்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகத் தனது காரில் ஏறிப் புறப்பட்டார். இந்த ரியாக்‌ஷன் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

No comments

Thank you for your comments