Breaking News

“மறைந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.26.15 லட்சம் நிதி!” - காஞ்சிபுரத்தில் 'காக்கி உதவும் கரங்கள்' அமைப்பின் நெகிழ்ச்சி நடவடிக்கை!

காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 27, 2026

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் காவலராகத் தேர்வாகி, தாம்பரம் பெருநகரக் காவல், குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவில் தலைமைக்காவலராக (HC 1837) பணியாற்றி வந்த தெய்வத்திரு R. ராஜா அவர்கள் கடந்த 09.09.2025 அன்று காலமானார்.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

அவரது குடும்பத்தினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், 2011-ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்த காவலர்களின் 'காக்கி உதவும் கரங்கள்' அமைப்பின் சார்பில் ரூ.26,15,000/- மதிப்பிலான மாபெரும் உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட நிதியுதவியின் விவரங்கள்:

  • குழந்தைகளின் எதிர்கால வைப்புத்தொகை: மறைந்த காவலர் ராஜாவின் பெண் குழந்தைகளான ரக்ஷ்னா (10) மற்றும் வர்சிகாசாய் (6) ஆகிய இருவருக்கும் அஞ்சல் அலுவலகச் சேமிப்புத் திட்டத்தில் தலா ₹10,00,000/- வீதம் மொத்தம் ₹20,00,000/- முதலீடு செய்யப்பட்டது.
  • தாயார் & மனைவிக்கான உதவி: அன்னாரது தாயார் திருமதி. ரங்கம்மாள் மற்றும் மனைவி திருமதி. ராதிகா ஆகிய இருவருக்கும் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தில் தலா ₹3,00,000/- வீதம் மொத்தம் ₹6,00,000/- முதலீடு செய்யப்பட்டது. மேலும், இருவருக்கும் அவசரச் செலவுகளுக்காக தலா ₹7,500/- ரொக்கமாக வழங்கப்பட்டது.
  • கூடுதல் உதவி: சிறுசேமிப்புத் திட்ட முகவர் திருமதி J. லட்சுமி சார்பில் இரண்டு மகள்களுக்கும் ₹6,500/- நிதியுதவி அளிக்கப்பட்டது.

டிஐஜி & எஸ்பி முன்னிலையில் நிதி ஒப்படைப்பு:

இன்று (27.08.2026) காலை 11.00 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்:

  • காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் (DIG): உயர்திரு. G. சஷாங் சாய், IPS
  • காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP): உயர்திரு. S. அரவிந்த், IPS

ஆகிய உயர்மட்டக் காவல் அதிகாரிகளின் கரங்களால் இந்த வைப்புத்தொகை ஆவணங்கள் மற்றும் ரொக்க உதவி மறைந்த காவலரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறையினரின் இணையற்ற சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள 'காக்கி உதவும் கரங்கள்' அமைப்பின் 54-வது பங்களிப்பான இச்செயலை அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

No comments

Thank you for your comments