Breaking News

“சாலை விபத்துகளைக் குறைக்க புதிய முயற்சி!” - நெடுஞ்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தைக் காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா தொடங்கி வைத்தார்!

 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 06, 2026

தமிழக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிறு வாகனத்தைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா இன்று (ஆகஸ்ட் 6, 2026) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2026:
மீனத்தில் வக்ரமாகும் சனி பகவான்!

உச்ச குருவின் பார்வையால் குவியப்போகும் அசுர நற்பலன்கள்! உங்க ராசிக்கு என்ன பலன்? - ஆடிமாதம் சூரி+குரு சேர்க்கை

 

முக்கிய நெடுஞ்சாலைகளில் தீவிர விழிப்புணர்வு:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சிறப்பு விழிப்புணர்வு வாகனம், அதிக போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் கொண்ட முக்கிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் தொடர்ந்து பயணம் செய்து ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.



வாகனம் பயணிக்கும் முக்கியச் சாலைகள்:

  • சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலை
  • சென்னை - திருச்சி நெடுஞ்சாலை
  • காஞ்சிபுரம் - தாம்பரம் சாலை
  • கிழக்கு கடற்கரைச் சாலை (ECR - விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள்)


நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர் அலுவலர்கள்:

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தொழில்நுட்ப உதவி மேலாளர் தட்சிணாமூர்த்தி, உதவி மேலாளர் (இயக்கம்) இளம்பரிதி, மற்றும் காஞ்சிபுரம் - ஓரிக்கை பணிமனை மேலாளர்களான முத்துசாமி, நாராயணன், வினோத் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments