Breaking News

“ரூ.50 லட்சம் கேட்டு அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்!” - 5 பேரை கைது செய்து பாலுச்செட்டிசத்திரம் காவல்துறை அதிரடி!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 13, 2026

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் அரிசி ஆலை அதிபரின் மகனைக் காரில் கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில், இரு இளஞ்சிறார்கள் உட்பட 5 பேரைப் பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டுக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சம்பவத்தின் பின்னணி:

காஞ்சிபுரம் பாபாசாகிப் தெருவைச் சேர்ந்த ரவி (62) என்பவரும், அவரது மகன் சுரேந்தர் (34) என்பவரும் சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 11, 2026 அன்று சுரேந்தர் தனது இருசக்கர வாகனத்தில் (TVS Apache - TN 21 BM 5002) சிறுகாவேரிப்பாக்கம் பச்சையம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே காரில் (Fiat Car - TN 09 BW 2539) வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுரேந்தரை அதிரடியாகக் கடத்திச் சென்றது.

இச்சம்பவத்தைப் பார்த்த அரிசி ஆலையின் மேலாளர் ராஜேந்திரன் உடனடியாக ரவிக்குச் செல்போனில் தகவல் அளித்துள்ளார்.

 ரூ.50 லட்சம் பேரம் & கொலை மிரட்டல்:

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, கடத்தப்பட்ட சுரேந்தரின் செல்போன் எண்ணிலிருந்தே ரவிக்கு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய கடத்தல் கும்பல், ரூ.50 லட்சம் பணத்தைப் பிணைத் தொகையாகக் கொடுத்து மீட்டுக் கொள்ள வேண்டும்; பணம் தரவில்லையென்றால் சுரேந்தரைக் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை & கைது:

இச்சம்பவம் குறித்து வாதி ரவி அளித்த புகாரின் பேரில் பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கடத்தலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாகச் சுற்றி வளைத்தனர்.

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2026
உச்ச குரு + புதாதித்ய யோகம்!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 3 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

கைது செய்யப்பட்ட நபர்கள்:

  1. சந்தான கிருஷ்ணன் (34) - த/பெ. ராதாகிருஷ்ணன், ஏகாம்பரபுரம், மேற்கு மாடவீதி, காஞ்சிபுரம்.
  2. தமிழ்மணி (22) - த/பெ. பெருமாள், காமாட்சி நகர், சிறுகாவேரிப்பாக்கம், காஞ்சிபுரம்.
  3. ராகுல் (23) - த/பெ. பொன்ராஜ், திருவள்ளுவர் சாலை, திருக்காலிமேடு, காஞ்சிபுரம்.
  4. இரு இளஞ்சிறார்கள் (Juveniles)

சுரேந்தரைப் பத்திரமாக மீட்ட காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

No comments

Thank you for your comments