தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்: 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் - அரசு உத்தரவு!
சென்னை | மே 29, 2026
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகளின் முழு விபரம் பின்வருமாறு:
14 மாவட்டங்களின் புதிய ஆட்சித்தலைவர்கள் விபரம்:
- வேலூர் மாவட்ட ஆட்சியர்: திருமதி. லீலா அலெக்ஸ்
| N.பிரியா ஐஏஎஸ் |
- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்: திருமதி. பிரியா
- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்: திரு. வீரப்பன்
| வந்தனா கார்க் ஐஏஎஸ் |
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்: செல்வி. வந்தனா
- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்: திருமதி. பத்மஜா
- நாமக்கல் மாவட்ட ஆட்சியர்: திரு. மதுபாலன்
- திருச்சி மாவட்ட ஆட்சியர்: திரு. பிரதீப் தயாள்
- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்: திருமதி. ரேவதி
- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்: திரு. பிரவீன் குமார்
- தருமபுரி மாவட்ட ஆட்சியர்: திரு. சரவணன்
- தேனி மாவட்ட ஆட்சியர்: திரு. ஆர். வைத்தியநாதன்
- மதுரை மாவட்ட ஆட்சியர்: திரு. ஆகாஷ்
- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்: திரு. ஆனந்த்மோகன்
- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்: திரு. பிரதாப்
முக்கியத் துறை புதிய செயலர்கள் மற்றும் இயக்குநர்கள்:
மாவட்ட ஆட்சியர்கள் தவிர, மாநில அளவிலான பல்வேறு முக்கியக் கழகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
- பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலர்: திருமதி. சுந்தரவல்லி
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளர்: திருமதி. பூஜா குல்கர்னி
- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர்: திரு. ஸ்ரீதர்
- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர்: திருமதி. சஜீவனா
தமிழகக் காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்ட அதே நாளில், இந்த பிரம்மாண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்ற உத்தரவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய அதிகாரிகள் அனைவரும் விரைவில் தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளனர்.

No comments
Thank you for your comments