Breaking News

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: 22 பேருக்கு புதிய பொறுப்புகள் - தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

 சென்னை | மே 22, 2026

தமிழகத்தில் நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் திரு. எம். சாய்குமார், இ.ஆ.ப. அவர்கள்  அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் முக்கியப் பொறுப்புகள் இந்த உத்தரவின் மூலம் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


முக்கியத் துறைச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் மாற்றம்:

  • ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப.: சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரான இவர், தற்போது மிக முக்கியத்துவம் வாய்ந்த வணிக வரி, பதிவு மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சந்தியா வேணுகோபால் சர்மா, இ.ஆ.ப.: டிட்கோ (TIDCO) தலைவராக இருந்த இவர், தற்போது திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
  • எஸ். ஸ்வர்ணா, இ.ஆ.ப.: அறநிலையத் துறைச் செயலராக இருந்த இவர், தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டி. கார்த்திகேயன், இ.ஆ.ப.: நகராட்சி நிர்வாகத் துறையின் முன்னாள் செயலரான இவர், தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.



ஆணையர்கள் மற்றும் இயக்குநர்கள் இடமாற்றப் பட்டியல்:

  • சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.: டிட்கோ மேலாண் இயக்குநர் பொறுப்பிலிருந்து தொழில் துறை சிறப்புச் செயலராக மாற்றம்.
  • ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப.: வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலர் பொறுப்பிலிருந்து தொழிலாளர் ஆணையராக நியமனம்.
  • எஸ்.ஏ. ராமன், இ.ஆ.ப.: தொழிலாளர் ஆணையர் பொறுப்பிலிருந்து சிப்காட் (SIPCOT) மேலாண் இயக்குநராக மாற்றம்.
  • ஜி. பிரகாஷ், இ.ஆ.ப.: சிஎம்டிஏ முன்னாள் உறுப்பினர் செயலர் பொறுப்பிலிருந்து வருவாய் நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையராக நியமனம்.
  • கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப.: சிப்காட் மேலாண் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆதிதிராவிடர் நல இயக்குநராக மாற்றம்.
  • மகேஷ்வரி ரவிகுமார், இ.ஆ.ப.: கைத்தறித் துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து சமூக நல இயக்குநராக நியமனம்.
  • டி. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.: சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட இயக்குநர் பொறுப்பிலிருந்து போக்குவரத்துத் துறை இயக்குநராக நியமனம்.
  • கிரன் குராலா, இ.ஆ.ப.: போக்குவரத்துத் துறை ஆணையர் பொறுப்பிலிருந்து நகர ஊரமைப்பு ஆணையராக மாற்றம்.

விடுப்பு முடிந்து திரும்பியவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாற்றம்:

  • கே. விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப.: நீண்ட விடுப்பிற்குப் பின் பணி திரும்பிய இவர், தற்போது மீன்வள இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜி. ரவிக்குமார், இ.ஆ.ப.: கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரான இவர், தற்போது திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியராக (Collector) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டி. சாருஸ்ரீ, இ.ஆ.ப.: விடுப்பில் இருந்து திரும்பிய இவர் கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆஷா அஜித், இ.ஆ.ப.: தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட செயல்பாட்டு அதிகாரி பொறுப்பிலிருந்து சுற்றுசுழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்குநராக நியமனம்.
  • லலித் ஆதித்யா நீலம், இ.ஆ.ப.: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் ஆணையர் பொறுப்பிலிருந்து சேலம் மாநகராட்சி ஆணையராக அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதர முக்கிய நியமனங்கள் (அட்டவணை):

அதிகாரி பெயர் (IAS)பழைய பொறுப்புபுதிய பொறுப்பு
வி. ஷோபனாஎழுதுபொருள் அச்சகத் துறை ஆணையர்துணி நூல் துறை ஆணையர்
டி. கிறிஸ்துராஜ்டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர்நில அளவைத் துறை இயக்குநர்
டி.ஜி. வினய்சென்னை குடிநீர் வாரிய முன்னாள் மேலாண் இயக்குநர்தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநர்
எஸ். அனீஷ் சேகர்பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநர்தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் (NHM)
ஆர்.வி. சஜீவனாதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக முன்னாள் மேலாண் இயக்குநர்தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட செயல்பாட்டு அதிகாரி & பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்புத் திட்ட இயக்குநர்

புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட மறுநாளே, நிர்வாகத்தை முழு வேகத்தில் முடுக்கிவிடும் நோக்கில் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments