காஞ்சி வரதர் கோயில் கருட சேவை, தேரோட்டம்: பக்தர்களின் வசதிக்காக 5 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பு - அரசு அறிவிப்பு!
காஞ்சிபுரம் | மே 29, 2026
இதனை முன்னிட்டு, நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், வெளியூர்களில் இருந்து வரும் ஆன்மீகப் பெருமக்களின் தங்குதடையற்ற பயணத்திற்காகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காகக் காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய எல்லைப் பகுதிகளில் 5 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் இடங்கள்:
பக்தர்கள் தங்களின் வழித்தடங்களுக்கு ஏற்பப் பேருந்துகளை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் கீழ்க்கண்ட இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் செயல்படும்:
- ஒலிமுகமது பேட்டை தற்காலிகப் பேருந்து நிலையம் – காஞ்சிபுரம்
- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக தற்காலிகப் பேருந்து நிலையம் – காஞ்சிபுரம்
- பழைய இரயில்வே நிலையம் தற்காலிகப் பேருந்து நிலையம் – காஞ்சிபுரம்
- புதிய இரயில்வே நிலையம் தற்காலிகப் பேருந்து நிலையம் – காஞ்சிபுரம்
- ஓரிக்கை தற்காலிகப் பேருந்து நிலையம் – காஞ்சிபுரம்
பக்தர்களுக்கான முக்கியக் குறிப்பு:
நாளை (சனிக்கிழமை) அதிகாலை நடைபெறும் மகா கருட சேவை மற்றும் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் தேர்த்திருவிழா ஆகிய இரு நாட்களிலும் இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் முழுமையாகச் செயல்படும். குறிப்பிட்ட இந்த நாட்களில் காஞ்சிபுரம் மாநகரப் பகுதிக்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையங்களைப் பயன்படுத்தித் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments
Thank you for your comments