Breaking News

"உத்தரமேரூருக்குப் புதிய பேருந்து நிலையம் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை": வேட்பாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ. அதிரடி வாக்குறுதிகள்!


காஞ்சிபுரம் | ஏப்ரல் 04, 2026

2026 சட்டமன்றத் தேர்தலில் உத்தரமேரூர் தொகுதியில் 6-வது முறையாகப் போட்டியிடும் திமுக வேட்பாளர் க. சுந்தர், தொகுதி மேம்பாட்டிற்கான தனது தொலைநோக்குத் திட்டங்களை "தேர்தல் பக்கத்திற்காக" பிரத்யேகமாகப் பகிர்ந்து கொண்டார்.

தொகுதிக்கு என்ன செய்வேன்? – முக்கிய வாக்குறுதிகள்:

  • புதிய பேருந்து நிலையம்: "உத்தரமேரூர் பேருந்து நிலையம் தற்போது இடவசதி குறைவாக உள்ளது. இதற்காகப் புதிய இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்."
  • தொழில் வளர்ச்சி: "திருப்புலிவனத்தில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் சிட்கோ (SIDCO) தொழிற்பேட்டை அமைத்துத் தரப்படும்."
  • போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு: உத்தரமேரூரில் புதிய போக்குவரத்து பணிமனை (Bus Depot), வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) மற்றும் புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் ஆகியவை அமைக்கப்படும். மேலும், வாலாஜாபாத் பகுதிக்கு எனப் புதிய தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்படும்.
  • சாலைக் கட்டமைப்பு: "உத்தரமேரூர் புறவழிச்சாலைப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. இவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்."
  • மருத்துவ வசதி: உத்தரமேரூர் மற்றும் வாலாஜாபாத் அரசு மருத்துவமனைகள் கூடுதல் வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் (Upgrade).

அனுபவமும் சேவையும்:

தமது அனுபவம் குறித்து அவர் பேசுகையில்:

"நான் ஏற்கனவே 5 முறை இந்தப் பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் முடிந்தவரைச் செய்துள்ளேன். கால மாற்றத்திற்கு ஏற்பத் தொகுதிக்குத் தேவையான புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் எப்போதும் தயாராக இருக்கிறேன்."

No comments

Thank you for your comments