"தாய்மாமன் தங்க மோதிரம், அண்ணன் சீர் திட்டம்": காஞ்சிபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் ஆர்.வி. ரஞ்சித்குமார் தேர்தல் அலுவலகம் திறப்பு!
காஞ்சிபுரம் | ஏப்ரல் 06, 2026
கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை:
தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்கு முன்னதாக, நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த த.வெ.க.-வின் கொள்கைத் தலைவர்களான காமராஜர், அம்பேத்கர், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் உருவப் படங்களுக்கு வேட்பாளர் ஆர்.வி. ரஞ்சித்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிரடித் தேர்தல் வாக்குறுதிகள்:
தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்து, கட்சியின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு ஆர்.வி. ரஞ்சித்குமார் பேசியதாவது:
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் தங்க மோதிரம் மற்றும் குழந்தைகள் நலத் தொகுப்பு வழங்கப்படும்.
- அண்ணன் சீர் திட்டம்: ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்.
- மகளிர் உரிமைத் தொகை: அரசு ஊழியர்களைத் தவிர்த்து, 60 வயது வரை உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும்.
- ஊழலற்ற ஆட்சி: "எந்தக் கட்சியிலும் இல்லாத சிறப்பான திட்டங்கள் த.வெ.க. அறிக்கையில் உள்ளன. ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய மக்கள் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்," என அவர் கேட்டுக்கொண்டார்.
நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் நகரக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தனர். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஆர்.வி. ரஞ்சித்குமார், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments