Breaking News

முட்டவாக்கம் பள்ளியில் புதிய வகுப்பறைகள்: உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர் திறந்து வைத்தார்!

 காஞ்சிபுரம் | மார்ச் 13, 2026

தமிழக முதலமைச்சர், திராவிட நாயகர் அவர்களின் நல்லாட்சியில், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் முட்டவாக்கத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.


திட்ட விபரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுக் உறுப்பினர் நிதியிலிருந்து, முட்டவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

திறப்பு விழா:

இன்று நடைபெற்ற விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. க. சுந்தர் MLA அவர்கள் கலந்துகொண்டு, புதிய வகுப்பறைக் கட்டிடங்களைத் திறந்து வைத்துச் சிறப்பித்தார். பின்னர் அவர் பள்ளி வகுப்பறைகளைப் பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார்.

பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் திரு. சி.கே.வி. தமிழ்செல்வன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் திருமதி. நித்யா சுகுமார், ஒன்றிய குழுத் தலைவர் திருமதி. மலர்க்கொடி குமார், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. தெய்வானை சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் திரு. மாரிமுத்து, திரு. இரா. இளஞ்செழியன், திரு. எஸ்.வி. ரமேஷ், திரு. பி.என். ரவி, திரு. கருணாகரன், முட்டவாக்கம் திரு. வி.ஏ.ஜி. மனோகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் திரு. டி. ராம்பிரசாத், பருத்திகுளம் தமிழச்செல்வன் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர இத்தகைய கூடுதல் கட்டிடங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் எனப் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.




No comments

Thank you for your comments