விருத்தாசலத்தில் அதிரடி சாலை மறியல்: மோடி அரசை கண்டித்து சிஐடியு முழக்கம்! - நூற்றுக்கணக்கானோர் கைது.
விருத்தாசலம் | டிசம்பர் 23, 2025
- தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்.
- 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது.
- ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து, தொழிலாளர்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்குவதை நிறுத்த வேண்டும்.
- ஆபத்தான தொழில்களில் இரவு நேரப் பணிகளில் பெண்களை அமர்த்தக் கூடாது.
கைது நடவடிக்கை: சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் தேசிங், மாவட்ட துணை தலைவர் தனம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை விருத்தாசலம் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு: இந்த அதிரடி போராட்டத்தால் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்தப் பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments