காஞ்சிபுரம் புத்தவிகாரை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
காஞ்சிபுரம், நவ.2:
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் அமைந்துள்ள புத்த விகாரை தனியார் பள்ளி மாணவர்கள் பலரும் நேரில் பார்வையிட வந்திருந்தனர்.
அவர்களை விகாரின் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு வரவேற்றதுடன் அவர்களுக்கு பௌத்த தியானமும் கற்றுக் கொடுத்தார்.
விகாரின் பொருளாளர் எம்.கௌதமன் காஞ்சிபுரத்தின் வரலாறு,போதிதர்மன் மற்றும் மணிமேகலையின் வரலாறு குறித்து விளக்கி கூறினார்.
மாணவர்கள் வரலாறுகளை தெரிந்து கொண்டதுடன் குறிப்பும் எடுத்துக் கொண்டனர்.நிகழ்வில் புத்த விகாரின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments