Breaking News

கலைஞர் கருணாநிதி 7ஆம் ஆண்டு நினைவுநாளில் காஞ்சிபுரத்தில் 300 பேருக்கு அன்னதானம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுகவினர் அமைதி பேரணி, சிலைக்கு மலரஞ்சலி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், இளைஞரணி செயலாளர் யுவராஜ் ஏற்பாட்டில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மேலும், மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


On the 7th death anniversary of former Tamil Nadu CM Kalaignar M. Karunanidhi, DMK members in Kanchipuram organized an annadhanam event, serving food to 300 people, with local MLAs and party leaders participating.

No comments

Thank you for your comments