Breaking News

காஞ்சிபுரம் செவலிமேடு மேம்பாலத்தில் புதிய தார்ச்சாலை அமைப்பு – பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சிபுரம், ஜூலை 29:

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு மேம்பாலமாக அமைந்துள்ளது. இப்பாலத்தின் தரைப்பகுதி பல இடங்களில் பழுதடைந்ததன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துக்களும், அதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன.

மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படும் போது நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் காத்திருப்பதுடன் வாகன ஓட்டிகள், பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.

இது குறித்து நாளிதழ்கள்,தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு நபர்கள் பதிவிட்டிருந்தனர்.இதன் காரணமாக காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலத்தின் தரைப்பகுதியில் உள்ள சேதங்களை செப்பனிடும் வகையில் புதியதாக தார்ச்சாலை அமைத்துள்ளனர். 

இதனால் வாகனங்களும் எவ்வித தங்கு தடையின்றி சென்று வருவது பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.


ew Tar Road Laid on Sevalimedu Flyover in Kanchipuram – Public Welcome Improved Traffic Flow


No comments

Thank you for your comments