Breaking News

விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம் -ரூ.15.70 லட்சம் வசூல்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், கடந்த  ஜூன் மாதம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையிலான அலுவலர்கள்  வாகன தணிக்கை செய்து, விதிமீறிய 220 வாகனங்களுக்கு, 15.70 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.



காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவுபடி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில், விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத வாகனங்கள் என, விதியை மீறிய இயக்கிய 220 வாகனங்கள் கண்டறியப்பட்டது.

இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என, மொத்தமாக 15 லட்சத்து 70 ஆயிரத்து 810 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனம்,  பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments