Breaking News

நடிகர் சூரியாவின் 50-வது பிறந்தநாள் விழாவை இரத்ததான கொடை சேவை அளித்து கொண்டாடிய ரசிகர்கள்

திரைப்பட நடிகர் சூரியாவின் 50-வது பிறந்தநாள் விழாவானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 


இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய மாநில நற்பணி இயக்க நிர்வாகி ஆர்.ஏ.ராஜ் கலந்துகொண்டு இந்த இரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் மாவட்ட செயலாளர் கணேஷ், மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கர்,மாவட்ட துணை செயலாளர் வேதா,மாவட்ட பொறுப்பாளர் தியாகராஜன், மாவட்ட அமைப்பாளர் தினேஷ், காஞ்சிபுரம் மாநகர தலைமை சார்பாக நகர செயலாளர் ஆனந்த் ஆகாஷ்,நகர துணை செயலாளர் பாலாஜி உள்ளிட்ட‌ நிர்வாகிகளும் காஞ்சிபுரம் மாவட்ட,மாநகர,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் என சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments