காஞ்சிபுரத்தில் ஆசிரியர்கள் சாலை மறியல் - 120 பெண்கள் உட்பட 185 பேர் கைது
காஞ்சிபுரம், ஜூலை 17:
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் ஜான் வெஸ்லி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சாலை மறியல் செய்தமைக்காக 120 பெண்கள் உட்பட 185 பேரைக் கைது செய்தனர்.
No comments
Thank you for your comments