Breaking News

வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த மையம் துவக்கம்..!

கோவை மாவட்டம் சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து திருச்சி சாலையில் உள்ள 150 படுக்கைகள் கொண்ட விஜிஎம் பல்நோக்கு மருத்துவமனையில் கேவிபி–விஜிஎம் அறக்கட்டளை இரத்த மையத்தையை உலக இரத்ததானம் செய்பவர்கள் தினத்தில் திறந்து வைத்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு இரத்த மையத்தை துவக்கி வைத்தனர்.



உடன் விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் விஜிஎம் இரத்த வங்கி திட்டத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத்,விஜிஎம் மருத்துவமனையின்  மருத்துவ இயக்குநரும் எலும்பியல் துறைத் தலைவருமான டாக்டர் சுமன், விஜிஎம் மருத்துவமனையின்  கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் மித்ரா பிரசாத் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments