Breaking News

போக்ஸோ சட்ட விழிப்புணர்வு நிகழ்வு – வேலூர் அரசு சட்ட கல்லூரி & டான் பாஸ்கோ பள்ளியின் இணைந்து நடத்தினர்

வேலூர் அரசு சட்ட கல்லூரி மற்றும் டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி இணைந்து, மாணவர்களுக்கு போக்ஸோ (POCSO) சட்டத்தினை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை இன்று(04.03.2025) நடத்தினர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.




குழந்தைகளின் உரிமைகள் மற்றும் போக்ஸோ சட்டத்தை மையமாகக் கொண்டு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வர் திரு. கிருபாகரன் தலைமையில், அரசு சட்ட கல்லூரி வேலூர் முதல்வர் பேராசிரியர் முனைவர் கே. லதா அவர்கள் நிகழ்வை தலைமைத் தாங்கி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முனைவர் சா. ஹெப்சிபா பியூலா அவர்களின் ஒருங்கிணைப்பில், வேலூர் சட்ட கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினர்.

No comments

Thank you for your comments