Breaking News

பள்ளி மாணவிகள் தங்கம் பதக்கம் வென்று சாதனை ..!

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 6வது தேசிய அளவிலான  குவாங்கிடோ போட்டியில் ச  தங்கம் பதக்கம் வென்று அசத்தினர்.



குவாங்கிடோ அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய போட்டியில்  28 மாநிலங்களிலிருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் பங்கேற்ற கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி இனியா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இன்சிகா புல் காண்டாக்ட் பைட்டிங், செமி காண்டாக்ட் ஃபைட்டிங், குவான் மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி தங்கம் பதக்கம் வென்றனர் .தேசிய போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் சகோதரிகளான இனியா மற்றும்  இன்சிகா இருவரும் வருகின்ற மார்ச் மாதம் அர்மேனியா நாட்டில் நடைபெற உள்ள ஆசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளனர் வெற்றி பெற்ற மாணவிகளை கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மாலதி,பயிற்சியாளர் பிராங்கிளின் பென்னி,அமிர்தராஜ் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

No comments

Thank you for your comments