கோவை மக்களின் கண்களை கவர்ந்தது விவசாயி சிலை...!
கோவை உக்கடம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள போக்குவரத்து ரவுண்டானா பகுதியில் ஆர்- கோல்டு நிறுவனம் சார்பில் உழவையும் உழவரையும் சிறப்பிக்கும் வகையில் 'உழவே தலை'என்பதை விளக்கும் வகையில் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி,கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உழவர் சிலையை திறந்து வைத்தனர். இதில் விவசாயி கலப்பையுடன் மாடுகளை பூட்டி உழவு உழுவது போலவும், பெண் விதைகளை தூவுவது போலவும் 6 அடி உயர மனித சிலைகள், காளை மாடு சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.சிலை திறப்பு விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தபட்டன.பொள்ளாச்சி புகழ் வள்ளி கும்மி ஆட்டம், கோவை புகழ் சிலம்பாட்டம், மற்றும் பொங்கல் சிறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். சிலை நிறுவி பராமரிப்பு பணிகளை ஆர்- கோல்ட்"நிறுவனர் எம். எம் .ரங்கசாமி செய்திருந்தார்.
இந்நிகழ்வில் நகரத் திட்டமிடுனர் குமார், உதவி ஆணையர் செந்தில் குமரன், நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சதீஷ்குமார், ஆர்.மகாபிரபு, மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments