Breaking News

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகள் 360 பேருக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார் அமைச்சர் நாசர்

பூந்தமல்லி, ஜன.1 - 

புதுமைப் பெண் திட்டத்தில் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி மாணவிகள் 360 பேருக்கு வங்கி பற்று அட்டையை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 360 மாணவிகளுக்கு தலா  ரூ.1,000/-த்திற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியது, திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 8,571 பேரும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 8,189 பேருக்கும் தலா  ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும்  மாணவியர்களுக்கு இன்று முதல் ரூ 1000 வழங்கப்படவுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் 360 மாணவிகள் பயன்பெறுவார்கள். இதனால் ஒரு மாதத்திற்கு 17,120 மாணவர் - மாணவிகளுக்கு  ரூ.1,71,20,000/- செலவு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வையின் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், தமிழ்நாட்டில்  பயிலும் மாணவ- மாணவியர்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்து உளளது என்றார். 

 இந்த நிகழ்ச்சியில் திருத்தணி தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஆவடி மேயர் கு.உதயகுமார், மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர் வாசுகி, வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், தனி துணை ஆட்சியர் கணேசன், ஆவடி மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், அமுதாசேகர், வி.அம்மு, திமுக நிர்வாகிகள் சண்.பிரகாஷ், பேபி சேகர், பொன்.விஜயன், ஜி.நாராயணபிரசாத், கு.சேகர், பெ.வினோத் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

No comments

Thank you for your comments