Breaking News

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்,19 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம், ஜன.20:

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் 19 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் திங்கள்கிழமை வழங்கினார்.


காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 92 பேர் பங்கேற்றனர்.



இவர்களில் சென்னையை சேர்ந்த இரு தனியார் நிறுவனங்களுக்கு மொத்தம் 19 பேர் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் வழங்கினார்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பலரும் கிராமப்புற முதல் பட்டதாரி மாணவர்கள் எனவும் கல்லூரி முதல்வர் பேசுகையில் குறிப்பிட்டார்.

கல்லூரி பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் பலரும் முகாமில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments