காஞ்சிபுரத்தில் ஆசிரியை கொலை,கணவர் கைது
காஞ்சிபுரம், டிச.10:
காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக புணிபுரியும் மனைவியை செவ்வாய்க்கிழமை கணவர் கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி கொலை செய்தது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸôர் கணவரை கைது செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஆனந்தஜோதி பண்டிதர் தெருவில் வசித்து வருபவர் மோகனவேல்(45)டெய்லர் தொழில் செய்து வரும் இவருக்கு புவனேசுவரி(36) என்ற மனைவி இருந்து வருகிறார்.
புவனேசுவரி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.சம்பவ நாளன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புவனேசுவரியை கணவர் மோகனவேல் திடீரென கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர்களுக்கு ஹர்ஷினி(10) என்ற பெண் குழந்தையும் உள்ளது. சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து மோகனவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments