Breaking News

அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவமனை - அமைச்சர் ஆர் காந்தி திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் :

சின்ன காஞ்சிபுரம் சிவி ராஜகோபால் செட்டி தெருவில் கிருபா ஹாஸ்பிடல் எனும் பெயரில் காஞ்சிபுரத்திலேயே முதல் முறையாக அதி நவீன அறுவை சிகிச்சை மருத்துவமனையை துணி நூல் கைத்தறி துறை அமைச்சர்  ஆர்.காந்தி அவரது துணைவியார் கமலா காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

விழாவில் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி. எம்.பி எழிலரசன் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன்,பகுதி செயலாளர்கள் திலகர்,சந்துரு மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் ரூபலதா டாக்டர் கபில் நாகராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த மருத்துவமனையில் குடல் கணையம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மகப்பேறியியல் மருத்துவம் கருவூட்டல் மருத்துவம் லேப்ராஸ்கோபிக் மகளிர் அறுவை சிகிச்சை மற்றும் காஞ்சிபுரத்திலேயே முதல் முறையாக 3டி லேப்ராஸ்கோபி சிகிச்சை உள்ளிட்டவைகளில் நவீன முறையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments

Thank you for your comments