உலகறிந்த மார்க்சிய தத்துவ வாதி தோழர் சீதாராம் யெச்சூரி - நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் Dr கா.குமார் புகழஞ்சலி
வேலூர் :
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் உலகறிந்த மார்க்சிய தத்துவ வாதியாக விளங்கியவர். அவரது மறைவு மீளா துயரத்தை அளித்துள்ளது.
இந்திய மாணவர் சங்கத்தை பல ஆண்டுகள் வழிநடத்தி அகில இந்திய அளவில் சக்திமிக்க அமைப்பாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. பல உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோடு நெருக்கமாக பழகியவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னுள்ள கடமைகளை அழுத்தமாக வலியுறுத்தியவர்.
மதச்சார்பற்ற பன்முகத் தன்மை கொண்ட கூட்டாட்சி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டியவர். தனது பல்வேறு பங்களிப்புகள் மூலம் பலதுறையினரோடும் உறவுகளை வளர்த்துக் கொண்டவர்.
சென்னையில் பிறந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், சக தோழர்களுக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்(ழியிஹி) சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
No comments
Thank you for your comments