Breaking News

ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

காஞ்சிபுரம் :

தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர் எஸ். காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலில் ரூபாய் 25 கோடி மதிப்பில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.




ஆலயத்தின் வளாகத்தில் உள்ள திருக்குளத்தின் மைய மண்டபத்தினை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். 


கும்பாபிஷேகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவழிக்கப்பட்டுள்ளதா எனவும் அவர்கள் ஆய்வு செய்தனர். முன்னதாக மதிப்பீட்டு குழுவினரை அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரகுரு. உதவி ஆணையர் கருணாநிதி, கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், உறுப்பினர் ஜெகன்னாதன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்றனர். 

இதனை அடுத்து காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு காய்கறி மார்க்கெட், அண்னை அஞ்சுகம் திருமண மண்டபம் கட்டும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை தமிழக அரசுக்கும் ,சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்ப இருப்பதாகவும் மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments