Breaking News

தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை வழங்குவது குறித்த கருத்தரங்கம் - கலெக்டர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார்

வேலூர் :

சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் (sidbi) கிளையை வேலூரில் தொடங்குவது மற்றும்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை வழங்குவது குறித்த கருத்தரங்கை  மாவட்ட ஆட்சித் தலைவர்  வே. இரா. சுப்புலெட்சுமி,  வேலூர் தி ராயல் கிராண்ட் ஹோட்டலில்  இன்று (12.09.2024) தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார். 


சிறு தொழில் வளர்ச்சி வங்கி என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு வங்கியாகும். இந்த வங்கியானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முன்னேற்றத்திற்கு தேவையான நிதி ஆதாரம் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 

அந்த வகையில் இவ்வங்கியின் கிளையை வேலூரில் தொடங்கும் விதமாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் கருத்தரங்கம் இன்று வேலூர்தி ராயல் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்  வே. இரா. சுப்புலெட்சுமி பேசியதாவது, 

சிறு தொழில் வளர்ச்சி வங்கி நம்முடைய வேலூரில் தன்னுடைய கிளையே தொடங்க இருப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியமான ஒரு மைல்களல். SIDBI (Small Industries Development Bank of India) வங்கியானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அவர்களுக்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதிலும் முன்னோடியாக திகழ்கிறது. 

தமிழ்நாடு அரசின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  குறிப்பாக மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் NEEDS மற்றும் அண்ணல் அம்பேத்கர் சுய தொழில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம்ரூ. 20 லட்சம் முதல் ரூ10 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. 

மேலும் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டிய தடையின்மை சான்று மற்றும் இதர சான்றிதழ்களை பெறுவதற்கு வசதியாக ஒற்றைச் சாளர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு அனைத்து வகையிலும் அரசின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வேலூர் மாவட்டத்தில் SIDBI மற்றும் மாவட்ட தொழில் மையம் போன்ற பல்வேறு அமைப்புகளை பயன்படுத்தி தங்களுடைய தொழில் முதலீடுகளை இங்கே கொண்டு வர வேண்டும். அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எந்த நேரத்திலும் மாவட்ட நிர்வாகத்தை தொழில் நிறுவனங்கள் அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் SIDBI வங்கியின் முதன்மை பொது மேலாளர்  சஞ்சய் குப்தா, பொது மேலாளர்  பி. பிரவீன் குமார்,  வேலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  ரமணி, ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  ஆனந்தன் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

No comments

Thank you for your comments