காஞ்சிபுரத்தில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், செப்.12:
மதிமுக வின் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் செயலாளராக இருந்தவர் வளையாபதி.இவர் மீது காஞ்சிபுரம் நகர் காவல்துறையினர் கொலை வழக்கு தொடர்பாக தாக்கியதுடன் சித்ரவதைக்கு உள்ளாக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை.செல்வராஜ் தலைமை வகித்தார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் மோகன்,மாநகர செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை.சத்யா,விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு,பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
No comments
Thank you for your comments