Breaking News

25.08.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம்:

திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம்,  வல்லம்-வடகால் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 


திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், வல்லம் - வடகால் 110/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால், 25.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை வல்லம் சிப்காட், வடகால் சிப்காட், சலையனூர், பால்நல்லூர், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை, எச்சூர் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments